மக்கள் நலத்திட்டங்களை மக்களிடையே எடுத்துச்செல்லும் செய்தி மக்கள் தொடர்புத்துறை
செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழக அரசின் சாதனைகள், நலத்திட்டங்கள் ஆகியவை குறித்து அரசின் முக்கிய விழாக்கள், அரசு நிகழ்ச்சிகள், மனுநீதிநாள் முகாம், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆகியவற்றின்போது புகைப்படக் கண்காட்சிகள் நடத்தப்பட்டு மக்களிடையே எடுத்துச் சொல்லப்படுகிறது.
பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் 13.01.2013 அன்று வேப்பூர் ஊராட்சி ஒன்றியம், சு.ஆடுதுறை ஊராட்சியில் நடைபெற்ற பொங்கல் சுற்றுலா விழாவில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினைச் சுற்றுலா விழாவிற்கு வந்த ஸ்பெயின், ஜெர்மன், பிரான்ஸ், இத்தாலி, ஹாலந்து, பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளைச் சார்ந்த 50 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட பொங்கல் விழாவில் கலந்துகொண்ட 10,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
புகைப்படக் கண்காட்சி குறித்து குன்னம் ஊராட்சித் தலைவர் திரு.தி.இளங்கோவன் தெரிவித்ததாவது,
"மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றார்கள் அத்திட்டங்கள் குறித்து பத்திரிக்கைகள் வாயிலாகவும், தொலைக்காட்சி செய்திகள் வாயிலாகவும் அறிந்துள்ளேன். மாண்புமிகு தமிழக முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் சிறப்புகள் குறித்தும் சிறு வயது முதல் அறிந்துள்ளேன். இருந்த போதிலும் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் புகைப்படக் கண்காட்சியில் அம்மா அவர்கள் அறிவித்து செயல்படுத்திய அனைத்துத் திட்டங்கள் குறித்த புகைப்படங்கள், அத்திட்டங்களின் சிறப்பை எளிதாக உணர்த்துகின்றன. மேலும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நாட்டின் பெரிய தலைவர்களிடம் பாராட்டு பெற்றது குறித்த புகைப்படங்கள் நான் இதுவரை காணாதவையாகும்" என்று கூறினார்.
புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்ட திருமதி அமுதா முருகேசன் என்ற பெண் தெரிவித்ததாவது,
"எந்த ஒரு திட்டத்தை செயல்படுத்தினாலும் அதனை குறித்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்தினால் தான் அதிக மக்கள் பயன்பெற முடியும். செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தப் புகைப்படக்கண்காட்சியின் மூலம் சாதாரண பாமர மக்கள் கூட மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் திட்டம் குறித்து பார்த்து, படித்து தெரிந்து கொள்வது புகைப்படக் கண்காட்சியின் முக்கியத்துவத்தை தெரியப்படுத்துகின்றது. மாண்புமிகு தமிழக முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் சென்னையில் குறைந்த விலையில் உணவுப்பொருட்களை வழங்க மலிவு விலையில் உணவு வழங்கும் திட்டத்தைத் துவக்கி வைத்ததோடு அவர்களே உணவு பொருட்களை தனது திருக்கரங்களால் அள்ளி தட்டில் வைத்த புகைப்படம், ஊட்டியில் அரசு தேயிலை நிறுவனத்தை சிறப்பாகச் செயல்படுத்தி வருவது, வைகை அணையைக் கட்டி தென்மாவட்ட விவசாயிகளுக்கு எதிர்காலத்தை ஏற்படுத்திய பென்னிகுவிக் அவர்களுக்கு சிலை திறந்த நிகழ்ச்சி, கருணை அடிப்படையில் வாரிசுதாரர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி வருவது ஆகியன குறித்து தெரிந்து கொள்ள உதவியாக உள்ளது" என்று தெரிவித்தார்.
#AMMASchemes #AIADMKAchievements #AIADMK


No comments:
Post a Comment