விளை நிலங்களில் எரிவாயு குழாய்களை பதிக்கும் கெய்ல் நிறுவனத்தின் திட்டத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டுமென்று வழியுறுத்தி மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அம்மா அவர்கள் உத்தரவுப்படி, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.

"இந்த அரசு ஏழை, எளியவர்களுக்கான அரசு. இல்லாதோரை கை தூக்கி விடும் அரசு. குறை உள்ளவர்களை நிறைவாக்கும் அரசு. ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்களை காக்கும் அரசு. எனவே தான், வளர்ச்சி என்பதை வெறும் பொருளாதார வளர்ச்சியாக நான்
பார்ப்பதில்லை. மாநிலத்தின் மொத்த உற்பத்தியின் வளர்ச்சி, அதாவது GSDP மாத்திரம் ஆரோக்கியமான வளர்ச்சி அல்ல. நாட்டு முன்னேற்றத்திற்கு மொத்த உற்பத்தி வளர்ச்சி, பயன் அளிக்கலாம். ஆனால், வளர்ச்சி என்பது ஒவ்வொருவரையும் சென்றடைய வேண்டும். அடித்தட்டில் உள்ள மக்கள் பொருளாதார வளர்ச்சியின் பயனைப் பெற வேண்டுமென்றால் அவர்கள் கல்வியிலும், உடல் நலத்திலும் சிறந்து விளங்க வேண்டுமென்பது இன்றியமையாததாகும். கல்வி மற்றும் மக்களின் உடல்நலம்
ஆகியவற்றில் ஏற்படும் வளர்ச்சி சமுதாய வளர்ச்சிக் குறியீட்டை நிர்ணயிக்கும். எங்கு சமுதாய குறியீடுகள் விரைந்து வளர்ச்சி அடைகின்றனவோ அங்கு தான் ஏற்றத்தாழ்வற்ற நிலை ஏற்படும். அப்போது தான் எல்லோரும் எல்லாமும் பெற முடியும்.
"எல்லாரும் ஓர் நிறை எல்லாரும் ஒர் நிலை" என்ற குறிக்கோளை அப்போது தான் எய்த இயலும்." - மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா
சட்டமன்றப் பேரவையில் முதலமைச்சர் அம்மா அவர்கள் சுட்டிக்காட்டியதுபோல் புரட்சித்தலைவி அம்மாவின் சீர்மிகுத் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதால் தான் நல்வாழ்வு குறியீடுகளில் தமிழ்நாடு உன்னத நிலைமையை அடைந்துள்ளது.
தொடரட்டும் நல்லாட்சி பெருகட்டும் வளர்ச்சி!




No comments:
Post a Comment