Monday, 8 February 2016

08-02-2016 AIADMK #AMMA

விளை நிலங்களில் எரிவாயு குழாய்களை பதிக்கும் கெய்ல் நிறுவனத்தின் திட்டத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டுமென்று வழியுறுத்தி மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அம்மா அவர்கள் உத்தரவுப்படி, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.
All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)'s photo.
"இந்த அரசு ஏழை, எளியவர்களுக்கான அரசு. இல்லாதோரை கை தூக்கி விடும் அரசு. குறை உள்ளவர்களை நிறைவாக்கும் அரசு. ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்களை காக்கும் அரசு. எனவே தான், வளர்ச்சி என்பதை வெறும் பொருளாதார வளர்ச்சியாக நான்
பார்ப்பதில்லை. மாநிலத்தின் மொத்த உற்பத்தியின் வளர்ச்சி, அதாவது GSDP மாத்திரம் ஆரோக்கியமான வளர்ச்சி அல்ல. நாட்டு முன்னேற்றத்திற்கு மொத்த உற்பத்தி வளர்ச்சி, பயன் அளிக்கலாம். ஆனால், வளர்ச்சி என்பது ஒவ்வொருவரையும் சென்றடைய வேண்டும். அடித்தட்டில் உள்ள மக்கள் பொருளாதார வளர்ச்சியின் பயனைப் பெற வேண்டுமென்றால் அவர்கள் கல்வியிலும், உடல் நலத்திலும் சிறந்து விளங்க வேண்டுமென்பது இன்றியமையாததாகும். கல்வி மற்றும் மக்களின் உடல்நலம் 
ஆகியவற்றில் ஏற்படும் வளர்ச்சி சமுதாய வளர்ச்சிக் குறியீட்டை நிர்ணயிக்கும். எங்கு சமுதாய குறியீடுகள் விரைந்து வளர்ச்சி அடைகின்றனவோ அங்கு தான் ஏற்றத்தாழ்வற்ற நிலை ஏற்படும். அப்போது தான் எல்லோரும் எல்லாமும் பெற முடியும்.

"எல்லாரும் ஓர் நிறை எல்லாரும் ஒர் நிலை" என்ற குறிக்கோளை அப்போது தான் எய்த இயலும்." - மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா
சட்டமன்றப் பேரவையில் முதலமைச்சர் அம்மா அவர்கள் சுட்டிக்காட்டியதுபோல் புரட்சித்தலைவி அம்மாவின் சீர்மிகுத் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதால் தான் நல்வாழ்வு குறியீடுகளில் தமிழ்நாடு உன்னத நிலைமையை அடைந்துள்ளது.
தொடரட்டும் நல்லாட்சி பெருகட்டும் வளர்ச்சி!
All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)'s photo.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------701 பேருந்துகள், 65 சிற்றுந்துகள் என மொத்தம் ரூ. 144.37 கோடி மதிப்பிலான பேருந்துகளையும், இந்தியாவிலேயே முதன்முறையாக பெண்களுக்கான இருசக்கர வாகனங்களாக 31 மோட்டார் சைக்கிள் ஆம்புலன்ஸ் மற்றும் 10 ஸ்கூட்டர் ஆம்புலன்ஸ்களையும் மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்கள் கொடியசைத்து துவங்கி வைத்தார். இந்த இருசக்கர ஆம்புலன்ஸ்கள் அவசரகால பெண் மருத்துவ உதவியாளர் இயங்கும் வண்ணம் வடிவமைக்கப்ட்டுள்ளன.All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)'s photo.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------தமிழகத்தில் விவசாயிகள் பாதிக்கப்படாத வண்ணம் தமிழ்நாடு அரசுடன் கெயில் நிறுவனம் ஒத்துழைக்க வேண்டுமென்றும் குழாய்களை நெடுஞ்சாலை வழியாக பதிக்க கெயில் நிறுவனத்திற்கு பிரதமர் அறிவுறுத்த வேண்டுமென்றும் பிரதமருக்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அம்மா அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.மேலும் கெயில் விவகாரத்தில் அனைவரும் ஏற்கக்கூடிய வகையில் குழாய்கள் பதிப்பதில் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதே இப்பிரச்சனைக்கு தீர்வு என்றும் பிரதமர் உடனடியாக மாற்று வழியில் செயல்படுத்தும் முடிவை எடுக்க வேண்டுமென்றும் அம்மா அவர்கள் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)'s photo.

No comments:

Post a Comment